யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் , பட்டா ரக வாகனம் ஒன்றை புகையிரதம் மோதித் தள்ளியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையாக, புகையிரத கடவையை பட்டா ரக வாகனம் கடந்த போது, புகையிரதம் வாகனத்தை மோதித்தள்ளியது.
- Advertisement -
சம்பவத்தில் வாகனத்தை செலுத்திச் சென்ற, கொடிகாமம், தவசிக்குளத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சூசைநாதன் பிரதீபன் (32) என்பவரே உயிரிழந்தார்.
குறித்த நபர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது