யாழ்ப்பாணம் பாசையூரில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டு தப்பிச்சென்ற கும்பலைச் சேர்ந்த 7 பேர் சம்பவம் இடம்பெற்ற அரைமணி நேரத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- Advertisement -
நேற்று பிற்பகல் 2.30 மணியள வில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பில் மேலும் தெரிய்வருகையில், பாசையூர் அந்தோனியார் கோயிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெறுமதியான பொருள்களை உடைத்து அடாவடியில் ஈடு பட்டனர்.
- Advertisement -
அத்துடன் வீட்டிலிருந்தவர்களையும் அச்சுறுத்திவிட்டுத் தப்பிச்சென்றனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிடைத்த தவலின் அடிப்படை யில் யாழ் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் விசாரணைகளை முன்னெடுத் தனர்.
தொடர்ந்து சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட தேடுதலில் 3 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 7 பேர் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் இரண்டு மரக்கட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
சம்பவத்தில் பாசையூர், மணியந்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 22 வயதுக் கும் 27 வயதுக்கும் உட்பட்ட 7 பேரே கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்பட்டைக்கப்பட்டுள்ளனர்.