இலங்கையில், தடுப்பூசி அட்டை கட்டாயமாக்குவதற்கான இயலுமை குறித்து பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டிய அனைவரும் பூரணமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் பின்னரே இந்த நடைமுறை பின்பற்றப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
மேலும், இதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை, தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.