மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு வாவியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
குறித்த சடலமானது இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
வவுணதீவு காயமடு பிரதேசத்தைச் சேர்ந்த யோகநாதன் ராயூ (வயது-24) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.