இலங்கை தமிழ் அரசு கட்சியினால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தனியாக கடிதம் எழுதிய உறுப்பினர்களிடம் இலங்கை தமிழ் அரசு கட்சி விளக்கம் கோரியுள்ளது.
- Advertisement -
கட்சிக்குள்ளோ, கூட்டமைப்பிற்குள்ளோ கலந்துரையாடாமல் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் தயாரித்த கடிதத்தில் விடுதலைப்புலிகளின் போர்க்குற்றம் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது, இது தொடர்பில் கடுமையான எதிர்ப்பு தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பிற்குள் எழுந்தததை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இரண்டும் அதில் கையெழுத்திடவில்லை.
- Advertisement -
இலங்கை தமிழ் அரசு கட்சியின் 9 முக்கிய பிரமுகர்கள் தனியாக கடிதமொன்றை தயாரித்தனர், அவர்கள், விடுதலைப்புலிகளின் போர்க்குற்றம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், ஈ.சரவணபவன், மட்டு மேயர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.நடராசா ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிலையில், விடுதலைப்புலிகளின் போர்க்குற்றத்தையும் சுட்டிக்காட்டி கட்சி அனுப்பிய கடிதத்திற்கு மாறாக, இன்னொரு கடிதம் அனுப்பியமை தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கோர நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்சி விதிமுறைகளை பின்பற்றாமல் விளக்கம் கோரும் இந்த நடவடிக்கை காலாவதியாகும் என கட்சியின் பிரமுகர்கள் பலர் தெரிவித்தனர்.
கட்சியின் செயலாளரை நேற்றைய தினம் வவுனியாவில் சந்தித்த ஜனாதிபதி சட்டத்தரணி வழங்கிய ஆசோசனைக்கு அமைவாகவே இன் நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், கட்சியின் தலைவரிடம் ஜனாதிபதி சட்டத்தரணி கூறினால் அவர் சம்மதம் தெரிவிப்பார் என்றும், எனவே எமது கட்சியைப் பொறுத்தவரை எமக்கான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கும் ஒருவராக ஜனாதிபதி சட்டத்தரணி உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் என தனது ஆதரவாளர்களிடம் செயலாளர் கூறியுள்ளார்.
இன் நடவடிக்கை எடுக்கப் படும் பட்சத்தில் தமிழரசுக் கட்சி பாரிய இக்கட்டான நிலையை எதிர் கொள்ளும் என அரசியல் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இக் கடிதம் தொடர்பில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிர சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.