குடை மோதியதில் ஏற்பட்ட தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -
கண்டி போதனா வைத்திய சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர் குடையை எடுத்து செல்லும் போது , அக்குடை நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) சாரதியை தட்டியுள்ளது.
- Advertisement -
அதனால் சாரதி, பாதுகாப்பு உத்தியோகஸ்தரை திட்டியுள்ளார். அதனை அடுத்து இருவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்நிலையில் சக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் அவ்விடத்தில் கூடி தமது சக உத்தியோகஸ்தருக்கு ஆதரவாக தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை அடுத்து வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது. அதில் சாரதி மற்றும் மூன்று பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதியாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.