யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த 12 பிள்ளிகளின் தாயாரான 99 வயதான மூதாட்டி உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா எனும் மூதாட்டியே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
இறப்பதற்கு முதல் நாள்வரை மிக சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த குறித்த மூதாட்டி உயிரிழந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 1922ம் ஆண்டு பிறந்த அவருக்கு 12 பிள்ளைகளும், 64 பேரப்பிள்ளைகளும், 133 பூட்டப்பிள்ளைகளும், 42 கொப்பாட்டப்பிள்ளைகளும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
- Advertisement -
தனது வீட்டில் நேற்றுமுன்தினம் திடீரென நோய் வாய்வாய்ப்பட்ட நிலையில் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
அதனையடுத்து அவரது சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் முதாட்டி தொற்றுக்குள்ளானமை உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மூதாட்டியின் மரணம் அப்பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.