பாதாள உலகக் குழுவை சேர்ந்த சன்ஷைன் சுத்தா என்றழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா, சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தறை – கொட்டவில பகுதியில் வைத்தே இன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
நிழல் உலக தாதா மாகந்துரே மதுசின் நெருங்கிய சகாவாக சன்ஷைன் சுத்தா இருந்துள்ளார். மாகந்துரே மதுஷால் டுபாயில் நடத்தப்பட்ட விருந்துபச்சாரத்தில் அவர் பங்கேற்றிருந்தார். அங்கு கைதான நிலையில் நாடுகடத்தப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.சன்ஷைன் சுத்தாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
- Advertisement -
29 வயதான சன்ஷைன் சுத்தாவுக்கு ஒரு குழந்தை உள்ளது. அத்துடன், வெலிகம பகுதியிலுள்ள பெண்ணொருவருடன் இவர் கள்ளத் தொடர்பை பேணிவந்துள்ளார். இன்று அப்பெண்ணின் வீட்டுக்குசென்று திரும்பும்வழியிலேயே அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.