சுகாதார அமைச்சரான பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னதாக அறிந்திருக் கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் போக்குவரத்து அமைச்சராக அவர் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வன்னியாராச்சிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுகாதார அமைச்சில் செய்ய வேண்டிய பணி குறித்து தேடிப் பார்க்குமாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
- Advertisement -
அதன்போது தான் சுகாதார அமைச்சராக இல்லை என்றும் போக்குவரத்து அமைச்சர் என்றும் வன்னியாராச்சி கூறியதாகவு கூறப்படுகின்றது. அந்த வேளையில் தான் அமைச்சர் பவித்ரா வன்னியாராச் சியின் பதவி மாற்றம் குறித்து பிரதமர் மகிந்தவுக்கு தெரிய வந்ததாகவும் அநத தகவல்கள் தெரிவிக்கின்றன.