தனிமைப்படுத்தல் சட்டங்கள் பல இன்றைய தினம் முதல் கடுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தும் காலப்பகுதியில் மக்கள் உரிய சட்டங்கள் மற்றும் சுகாதார ஆலோசனைகளை மதித்து பின்பற்றுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சுகாதார சட்டங்களை மதித்து வீடுகளில் இருங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
இதேவேளை, நாளை தினம் முதல் திருமண நிகழ்வுகளுக்கு சட்டரீதியான அனுமதி வழங்கப்படாது. எனினும் வீடுகளில் திருமணங்களை பதிவு செய்துக் கொள்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
மணமகள், மணமகள், பெற்றோர், பதிவாளர்கள் மற்றும் சாட்சியாளர்கள் இருவர் பதிவு திருமணத்தில் கலந்து கொள்ள முடியும். அவர்களை தவிர்த்து வேறு ஒருவரும் பதிவு திருமணத்தின் போது இணைந்திருப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.