தற்போதைய நிலையில் பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ தேவைக்காக வைத்தியசாலைக்கு பிள்ளைகளை அழைத்து செல்வதனை தவிர்த்து வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் பிள்ளைகளை சமூகத்திற்குள் அழைத்து செல்ல வேண்டாம் என வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சன்ன பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.