காலி மாவட்டம், நாகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் திடீரென உயிரிழந்த தம்பதியினர் கொரோனா வைரஸ் தொற்றினாலேயே உயிரிழந்துள்ளனர் என்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாகொடையைச் சேர்ந்த 73 வயது நபரும், அவரது 72 வயது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
- Advertisement -
குறித்த வயோதிபர் நேற்று முன்தினம் வீட்டில் மரணமடைந்த நிலையில் அவரது சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனாத் தொற்றால் மரணமடைந்தமை தெரியவந்துள்ளது.
- Advertisement -
அதேபோன்று அவரது மனைவி நேற்று அவரது வீட்டில் மரணமடைந்துள்ள நிலையில், அவரது சடலமும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. குறித்த இருவரது சடலங்களும் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைவாகத் தகனம் செய்யப்பட்டுள்ளன.