திங்கட்கிழமை நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். நாட்டை மீண்டும் திறக்கும் முடிவை எடுத்த போது இருந்த சூழ்நிலையில் தற்போது இல்லை என்றும் குறிப்பிட்டார்.
- Advertisement -
மேலும், கடந்த வாரத்திலேயே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறினார். நிலவும் அபாயகரமான சூழ்நிலையில் எந்த முடிவுகளாக இருந்தாலும் கவனமாக எடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.