இலங்கையின் இரத்தினபுரி பகுதியிலிருந்து மற்றுமொரு நீலக்கல் கொத்தணி மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்திலிருந்தே 80 கிலோகிராம் நிறையுடைய குறித்த நீலக்கல் கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
- Advertisement -
இந்த நீலக்கல் கொத்தணி இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்பெறுமதி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனை சீனாவில் எதிர்வரும் நவம்பரில் இடம்பெறவுள்ள ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- Advertisement -
இதேவேளை, இரத்தினபுரி, கஹவத்த பிரதேசத்தில் உலகிலேயே மிகப்பெரிய நீலக்கல் கொத்தணியொன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.