மட்டக்களப்பு நகர் பொதுச் சந்தை தொகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலைய பகுதியில் 79 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
- Advertisement -
அதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதான் தலைமையில் பொது சுகாதார வைத்திய அலுவலக குழுவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- Advertisement -
இதற்கமைய அதிக தோற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இரு வர்த்தக நிலையங்கள் நேற்று (29) தற்காலிகமாக பொது சுகாதார பரிசோதகரினால் சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில் தொடர்ந்து வர்த்தக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையை பேணி நடந்துகொள்ளுமாறு சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.