நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்குகோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.
- Advertisement -
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்தும், தீர்ப்பில் இருந்த தன் மீதான விமர்சனங்களை நீக்கவும் கோரி நடிகர் விஜய் மேல்முறையீடு செய்திருந்தார்.
- Advertisement -
தனி நீதிபதி தீர்ப்பு நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ள அனுமதி கேட்ட இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு, நடிகர் விஜய்யின் மனுவை மாற்றுமாறு நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யின் மேல்முறையீடு மனு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.