மெக்ஸிகோ வளைகுடாவில் கடலுக்கு அடியில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் செல்லும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- Advertisement -
அத்துடன் இந்த தீ கடலில் பரவலடைந்து காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தீயின் அதிக வெப்பநிலை காரணமாக, அந்த பிரதேசம் முழுவதும் கடல்நீர் எரிமலை குழம்பு போன்று காட்சியளித்துள்ளது.
- Advertisement -
அந்நாட்டின் தீப்பரவலைக் கட்டுப்படுத்தும் பிரிவுகளுக்கு சம்பவ இடத்திற்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 5 மணிநேர போராட்டத்திற்கு பின்பு இந்த தீப்பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.