காவல்துறை பெண் கான்ஸ்டபிளான ஒருவரை ஆபாசமாக படம் எடுத்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹபராதுவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
காலி- வன்சாவல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள கான்ஸ்டபிள் ஒருவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.