கோவிட் இறப்புகள் மற்றும் நாட்டில் தொற்றுக்கள் தொடர்பான முரண்பாடான புள்ளிவிபரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனை ஒரு சதித்திட்டம் என்று , அரச மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
- Advertisement -
கோவிட் புள்ளிவிபரங்கள் தொடர்பான சர்ச்சையை எதிர்த்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய கேள்வி எழுப்பியுள்ளார்.
- Advertisement -
இதன் பின்னணியில் ஒரு சதி இருப்பதாக தாம் பொறுப்புடன் கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொற்றுநோயியல் பிரிவு தரவுகளை வெளியிடவில்லை என்று பாதெனிய குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுநோயியல் பிரிவுக்கு கண்காணிப்பு, பரவல் கட்டுப்பாடு, தடுப்பூசி, மருத்துவ நிர்வகிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு, செயல்பாட்டு ஆராய்ச்சி, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு போன்ற ஆறு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கோவிட் பணிக்குழு கூட்டத்தில் பாதெனிய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னால் தெரிவித்தார்.
இந்தநிலையில், சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் அசெல குணவர்தன, குறித்த விடயத்தின் பின்னணியில் ஒரு சதி இருப்பதாக முடிவுக்கு வரமுடியாது, ஆனால் புள்ளிவிவரங்களில் சில சிக்கல்கள் இருந்தன என்று கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையிலேயே தலைமை தொற்றுநோயியல் நிபுணராக பதவி வகித்த சுதத் சமரவீர, டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்