அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நாளை திங்கட்கிழமை விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
- Advertisement -
இந்த ஊடக சந்திப்பு நாளை கொழும்பில் உள்ள மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் முற்பகலில் நடைபெறவுள்ளது. மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கின்ற நிலையில் எரிபொருள் விலையை உயர்த்திய அமைச்சர் கம்மன்பில உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சாகர காரியவசம் நேற்று தெரிவித்திருந்தார்.
- Advertisement -
எனினும் பிரதமரின் ஆலோசனை பேரிலேயே எரிபொருள் விலையை உயர்த்தியதாக அமைச்சர் கம்மன்பில இன்று ஊடக சந்திப்பை நடத்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.