ரஷ்யாவிற்கும் உக்கிரேனுக்கும் பிரச்சனை வந்த போது கிரிமியா பகுதியில் ரஷ்ய படைகள் உள்நுழைந்து நிலை கொண்டது போல இந்திய படைகள் மீண்டும் இலங்கையின் வடக்கு கிழக்கில் நுழைய வேண்டிய பூகோள நலன் சார்ந்த அரசியல் இருக்கின்றது, அல்லது அமெரிக்கா அவ்வாறு நுழையக்கூடிய ஆபத்து இருக்கின்றது.
- Advertisement -
அது தவிர இலங்கையின் வசமிருக்கின்ற கச்சைதீவை இந்தியா திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்.
- Advertisement -
தமிழக வலையொளி தொலைக்காட்சி ஒன்றிற்கு அண்மையில் அளித்துள்ள நேர்காணலிளிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தவிர்ந்து ஈழத்தில் நடந்த 2009 யுத்தத்தின் போது கூட்டமைப்பின் செயற்பாடு, அப்போது இந்தியா நடந்துகொண்ட விதம் தொடர்பிலும் பல பதில்களை அளித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.