கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வரவுள்ளதாக கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதன்படி பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாக நபர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படாதவிடத்து அவர்களை அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதனையடுத்து அவருக்கு அவர்களுக்கு நோய் அறிகுறிகள் காணப்படின் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
குறித்த நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பின்பற்றப்படவுள்ளது.