இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இலங்கைக்கு சுற்றுலா வரும் இந்தியர்களுக்கு அரசாங்கம் தடை வித்துள்ளது. அதன்படி இந்தியர்களுக்கு சுற்றுலா பாஸ்போர்ட் விசா கொடுக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.
- Advertisement -
இந்தியாவில் கொரோனா 2வதுஅலை உச்சமடைந்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு மூன்றரை லட்சத்தை கடந்துள்ளது. இதனால் பல நாடுகள் இந்தியாவுடனான விமான சேவை உள்பட நடவடிக்கைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.
- Advertisement -
இந்த நிலையில், இலங்கையும் , இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்படமாட்டாது என அறிவித்து உள்ளது.
அத்துடன் ஏற்கனவே விசா வழங்கபட்டவர்களை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.