இலங்கையில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளது.
- Advertisement -

உடஹென்தென்ன பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண்ணொருவர் இறுதியாக கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று சனிக்கிழமை இரவு 9 மணி வரை 268 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 94, 832 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 91 456 பேர் குணமடைந்துள்ளதோடு , 2673 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.