உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருவர் பிரேத அறையில் திடீரென உயிர்தெழுந்த சம்பவம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
40 வயதான குறித்த நபர் திடீர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -

இந்நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவித்த நிலையில் சடலம் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் பிரேத அறைக்கு சென்றிருந்தபோது இறந்தவரின் உடலில் அசைவுகளை அவதானித்துள்ளார்.
குறித்த விடயம் மருத்துவர்களுக்கு கூறப்பட்ட நிலையில் மீளவும் விடுதிக்கு எடுத்து பரிசோதித்தபோது குறித்த நபர் உயிருடன் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை மேற்படி நபரின் உடலில் சீனியின் அளவு குறைவடைந்தமையினால், அவர் சுயநினைவை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நபர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்திய வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.