கொழும்பு – கல்கிஸ்ஸை, காலி வீதியில் ஒரு வீட்டின் அருகே கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இறந்தவர் 22 வயதான கல்கிஸ்ஸை பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் தற்போது கலுபோவில வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.