முஸ்லிம்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றோம் என சிங்களவர்களிற்கு வலியுறுத்த அரசாங்கம் விரும்புவதாகவும், புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளமை இனவெறி நிகழ்ச்சி நிரல் எனவும் இலங்கை முஸ்லிம் சபையின் துணைத் தலைவர் ஹில்மி அஹமட் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை முஸ்லிம் சபையின் துணைத் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -

பெண்கள் தங்களிற்கு விருப்பமான உடையை அணிவதற்குள்ள உரிமையாக புர்காவை கருதவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினால் உயிரிழந்த 350 முஸ்லிம்களின் சடலங்களை அவர்களின் மத நம்பிக்கைகளை மீறி அவர்கள் தகனம் செய்தனர். தற்போது அவர்கள் புர்காவையும் மதரசாக்களையும் தடை செய்ய முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மதராசாக்களின் நோக்கத்தை போன்ற நோக்கத்தை கொண்ட பௌத்த கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிற்கு எதிராக இந்த நடவடிக்கைகளை எடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
- Advertisement -
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு புர்கா தடை குறித்த பரிந்துரையை முன்வைத்திருந்திருந்தது. அதனைத்தொடர்ந்து, புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்காக அமைச்சரவைப் பத்திரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடந்த சனிக்கிழமை கையெழுத்திட்டார். இதனையடுத்து, புர்காவை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.