கொழும்பு − கிரான்ட்பாஸ் − கஜீமா தோட்டத்தில் இன்று அதிகாலை பரவிய பாரிய தீயினால், பல வீடுகள் எரிந்து சாம்பராகியுள்ளன. இன்று அதிகாலை 2.40 மணி அளவில் பரவிய தீயினாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சுமார் 50ற்கும் அதிகமான தற்காலிக வீடுகளே தீக்கிரையாகியுள்ளன.

பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கிரான்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.