தம்புத்தேகமவில் உள்ள ஹரிகாஸ்வேவா – மீகலேவா சாலையில் ஏராளமான மரங்கள் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் மின்னழுத்த மின் இணைப்புகளை நிறுவும் போர்வையில் மரங்கள் வெட்டப்பட்டதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -

சுமார் 70 பாரிய கும்புக் மற்றும் மாரா மரங்கள் இந்த முறையில் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், மரங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் மின் இணைப்புகளை நிறுவ ஏராளமான இடங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
