எதிர்வரும் ஜூலை 01 முதல் இலங்கையில் பிறந்த அனைத்து குடிமக்களுக்கும் புதிய பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்று பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு நபரின் அனைத்து தரவுகளும் கணனிமயமாக்கப்படவுள்ளதாக, பதிவாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பி.வீரசேகர தெரிவித்தார். இந்த துறைசார் அமைச்சர் சமல் ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில், தற்போதுள்ள பிறப்புச் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்பட்டு, புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன
- Advertisement -
