இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு சில நாட்களில் தட்டுப்பாடு நிலவலாம் என கூறப்படுகிறது. சர்வதேச அளவில் எரிவாயு விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு சிலிண்டருக்கு 750 ரூபா வரை நட்டம் ஏற்பட்டு வருவதாக எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.

இருந்த போதிலும் சிலிண்டர்களின் விலைகளை 650 ரூபாவரை அதிகரிக்க எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த கோரிக்கைக்கு இதுவரை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடமிருந்து உரிய பதில் அளிக்கப்படாத காரணத்தினால் உற்பத்திகளை குறைக்க எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.