கொழும்பு − டாம் வீதியில் பயணப் பையொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம், குருவிட்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட DNA மாதிரியுடன், கொலை செய்யப்பட்ட பெண்ணின் DNA மாதிரி ஒத்து போவதாக அரச மேலதிக இரசாயன பகுப்பாளர் D.L.H.W.ஜயமான்ன தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை இனி தேவையில்லை, அவர் யார் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவருக்கு பிரேத பரிசோதனை தொடங்கப்படலாம் என்று பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.