யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி உடனான போக்குவரத்து, இன்று முதல் ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுகிறதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
- Advertisement -
நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு குறித்த போக்குவரத்துக்கான தற்காலிக தடை நடைமுறையில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -
அதற்கு மாற்றுப் பாதையாக நல்லூர் ஆலயத்திலிருந்து கோயில் வீதியூடாகச் செல்லும் சிறிய வாகனங்கள், செட்டித்தெரு வீதி- செட்டித்தெரு ஒழுங்கை ( சின்னமயா மிஷன் வீதி) ஊடாகவும் நாவலர் வீதியிலிருந்து நல்லூர் ஆலயத்துக்கு கோயில் வீதியில் பயணிக்கும் வாகனங்கள், செட்டித்தெரு ஒழுங்கை- செட்டித்தெரு ஊடாகவும் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கனரக வாகனங்கள் குறித்த பாதைகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.