யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி உடனான போக்குவரத்து, இன்று முதல் ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுகிறதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு குறித்த போக்குவரத்துக்கான தற்காலிக தடை நடைமுறையில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மாற்றுப் பாதையாக நல்லூர் ஆலயத்திலிருந்து கோயில் வீதியூடாகச் செல்லும் சிறிய வாகனங்கள், செட்டித்தெரு வீதி- செட்டித்தெரு ஒழுங்கை ( சின்னமயா மிஷன் வீதி) ஊடாகவும் நாவலர் வீதியிலிருந்து நல்லூர் ஆலயத்துக்கு கோயில் வீதியில் பயணிக்கும் வாகனங்கள், செட்டித்தெரு ஒழுங்கை- செட்டித்தெரு ஊடாகவும் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கனரக வாகனங்கள் குறித்த பாதைகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.