கொழும்பு – வெள்ளவத்தையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில். மோட்டார் வாகனமொன்று வெள்ளவத்தை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதித் தள்ளி வேகமாக தப்பிச் சென்ற போது மேலும் 3 பேர் மோட்டார் வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர். குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
குடிபோதையில் வாகனம் செலுத்தியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதன்படி, இரவு விடுதியொன்றில் மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்திய சாரதி உட்பட அதில் பயணித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்