கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் உசாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண், கிரிவுள்ள பகுதியைச் சேர்ந்த 78 வயது பெண், கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 72 வயது ஆண், மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான பெண் மற்றும் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண் ஆகியோரே கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களாவர்.
- Advertisement -

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 489 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை புதிதாக 351 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 84,610 ஆக உயர்ந்துள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.