வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

இது குறித்து மேலும் தெரிய வருகையில், ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கடத்திச் சென்ற வாகனம் ஒன்றை வீதிக் கடமையில் நின்ற இராணுவத்தினர் மறித்துள்ளனர். எனினும் வாகனம் நிறுத்தாது சென்றமையால் அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இச்சம்பவத்தில் சேமமடு பகுதியைச் சேர்ந்த பிரசாத், சஜீபன் ஆகிய இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதன்போது கைப்பற்றப்பட்ட மரங்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.