நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
அந்த வகையில் கொழும்பு 15 ஐ சேர்ந்த 87 வயதான பெண் ஒருவர், கொழும்பு – 5 பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய பெண்ணொருவர், கொழும்பு 15 ஐ சேர்ந்த 78 வயது பெண், பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 73 வயது பெண், பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண், கொழும்பு 2 ஐ சேர்ந்த 63 வயது ஆண், கலேவெல பகுதியைச் சேர்ந்த 63 வயது ஆண் ஒருவர் உட்பட 7 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
- Advertisement -

அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 705 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.