கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த இராமையா விஜயரத்தினம் என்ற 54 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார். கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக மட்டக்களப்பில் இருந்து இவர் வந்துள்ளார்.
- Advertisement -

குறித்த அரிசி ஆலையில் நெல் பதப்படுத்தும் தொட்டிபொருத்து வேலை முடித்து கீழே இறங்க முயற்சித்தபோதே தவறி விழுந்துள்ளார். இவர் தவறி விழுந்ததை அவதானித்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.