நடிகர் ஆர்யா வெளிநாட்டில் வாழும் இலங்கையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
- Advertisement -
ஜேர்மனியில் வாழும் பெண்ணொருவரே இவ்வாறு ஆரியாவிடம் ஏமாந்ததாகவும் கூறப்படுகின்றது. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா ஜெர்மனியின் சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார்.
- Advertisement -
இவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி இவ்வாறு பண மோசடி செய்ததாக கூறப்படுகின்றது.
அத்தோடு தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதாக நடிகர் ஆர்யா மீது விட்ஜா , இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஒன்லைன் வழியாக புகார் அளித்ததுடன் , தனக்கும் நடிகர் ஆர்யாவின் தயாருக்கும் இடையில் இது தொடர்பில் இடம்பெற்ற வாக்குவாதங்கள், பண பரிவர்த்தனைகளுக்காக ஆதாரங்களையும் தன் புகாரில் இணைத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த புகார் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து விட்ஜா கூறுகையில்,
” நான் ஜெர்மனி நாட்டின் சுகாதாரத் துறையில் பணி புரிகிறேன். உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என கூறிய ஆர்யா, பணத்தை என்னிடத்தில் இருந்து பெற்றார். சில மாதங்கள் கழித்து என்னைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியமை தனக்கு தெரிந்ததாகவும், மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் விட்ஜா கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகமும் ,உள்துறை அமைச்சகமும் தலையிட்டதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் எனவும் இப்போது, ஆர்யா மீது புகார் கொடுத்துள்ளதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக ஆர்யா தன்னை மிரட்டுவதாகவும் அவர் எப்படி நாடகம் போட்டாலும் நான் என் புகாரை வாபஸ் பெறப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இது தொடர்பில் அக்கறை காட்டியதற்காக பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் , உள்துறை அமைச்சக செயலாளர் கோபால் ஜா தமிழ்நாடு முதலமைச்சர் தனிபிரிவு சிறப்பு அதிகாரி சரவணவேல் ராஜ் ஐ.ஏ.எஸ் – க்கு எனது புகாரை அனுப்பியுள்ளார். விரைவில் , தமிழக அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றும் விட்ஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை எங்க வீட்டு மாப்பிள்ளை ‘என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா தனக்கு பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டபோது அதில் 16 பெண்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் கலந்து கொண்டிருந்தார் .
எனினும் அந்த நிகழ்ச்சியில் இருந்து தனக்கு மனைவியை தேர்வு செய்யாத நடிகர் ஆர்யா, அதன்பின்னர் நடிகை ஷாயிஷாவை திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.