கொரோனா தொற்றாளர்களாக மேலும் 192 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 4 ஆயிரத்து 234 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- Advertisement -

அத்துடன், கொரோனா தொற்றால் மேலும் 672 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக் கை 76 ஆயிரத்து 514ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 523பேர் வைத்திய கண்காணிப் பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.