ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை எதிர்த்து அனைத்து நாடுகளும் வாக்களிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரின் 2 ஆவது நாளில் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டார்.
- Advertisement -

ஸ்ரீலங்காவில் தேசிய நல்லிணக்கம் நிலையான அமைதி மற்றும் மனித உரிமைகள் பொறுக்கூறல் போன்ற விடயங்களில் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், அநாவசியமான அghழுத்தங்களையும் தலையீடுகளையும் ஸ்ரீலங்கா விரும்பவில்லையெனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.