அம்பாறை சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட்டிருந்த 12 பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் 12love only love பவுண் தங்க நகையை இருப்பதை அறியாமல் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார். அப்பொதி சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
- Advertisement -

இந் நிலையில், குறித்த வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை தேடிய வேளையில், காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டதை தொடர்ந்து, இவ்விடயம் சம்மாந்துறை பிரதேச சபை திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் பணிபுரைக்கமைவாக உடனடியாக செயற்பட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் வங்களாவடி சேதனைப் பசளை உற்பத்தி நிலையத்தில் ஊழியர்களின் உதவியுடன் குறித்த திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த அனைத்து கழிவுக்குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தேடியபோது 12 பவுண்தங்க நகை மீட்கப்பட்டு உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் மற்றும் ம்மாந்துறை பிரதேச சபையின் வங்களாவடி சேதனைப் பசளை உற்பத்தி நிலையத்தில் ஊழியர்களுக்கும் பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.