சிலாபம் – பள்ளம சேருக்கலையில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோ விபத்தில் சிக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார். அவர் பயணித்த ஜீப் ரக வாகனமே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த ஜீப் ரக வாகனத்தில் பயணித்துக் கொண்டு இருந்த போது வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
- Advertisement -

இந்த விபத்தில் சாரதி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொhலிஸார் உறுதி செய்துள்ளனர். காயமடைந்த மூன்று பேரும் சிகிச்சைகளுக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.