காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் நீலக்காடு பகுதியில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 62 குடும்பங்களுக்குச் சொந்தமான 51 பரப்பு காணியினை கடற்படையினரின் பயன்பாட்டுக்கு சுவீகரிப்பதற்கென நில அளவைத் திணைக்களத்தினரால் இன்று காணி அளவீடு செய்யவுள்ளதா கூறப்பட்ட நிலையில், காணி அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளால் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பட்டுள்ளது.
- Advertisement -

காரைநகர் ஜே/45 கிராமசேவகர் பிரிவில் எலறா கடற்படை தளம் அமைப்பதற்காக 62 குடும்பங்களுடைய 51 ஏக்கர் காணி, நிலஅளவை திணைக்களத்தால் இன்றைய தினம் அளவீடு செய்யப்பட்ட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.