சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலும் 1500 யுவான்களை வழங்கவே சீனா முன்வந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் ஐதேக உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே ரணில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலும் 1500 யுவான்களை வழங்கவே சீனா முன்வந்துள்ளது.
- Advertisement -

சீன யுவான்களை இலங்கை பெற்றுக்கொண்டாலும் டொலரிலேயே மீள் செலுத்த வேண்டும்.இதன்போது திறைசேரியின் இருப்பு வீதம் அதிக புள்ளியில் காணப்பட்டாலும் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி இருப்பாக இலங்கையிடம் காணப்படாது. இதனால் சீனப் பொருட்களை மாத்திரமே எமக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே தற்போதுள்ள சீன பொருட்களுக்கான கொள்வனவு கட்டுப்பாட்டை அகற்ற வேண்டும் என்றார்.