Times.lkTimes.lk
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Reading: இரண்டு முறை கருக்கலைப்பு, 19 வயது பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்..!
Share
Aa
Times.lkTimes.lk
Aa
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Times.lk > News > இரண்டு முறை கருக்கலைப்பு, 19 வயது பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்..!
News

இரண்டு முறை கருக்கலைப்பு, 19 வயது பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்..!

admin
Last updated: 2021/02/17 at 11:28 AM
admin
Share
3 Min Read
SHARE

கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்யதுள்ள நிலையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பமாக இருப்பதாக கணவரையும் 10 மாதங்கள் ஏமாற்றி வந்த பெண் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை திருடி சென்றதன் பின்னணி என்ன? போலீசாரிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் என்ன?

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பாக்கியலட்சுமி (24). இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த பாக்கியலட்சுமி பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த குழந்தையை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை செய்து வந்ததில், குமாரபுரத்தைச் சேர்ந்த நர்மதா (19) என்ற பெண் தான் குழந்தையை திருடிச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் வைத்து போலீசார் நர்மதாவை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் நர்மதா கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது.

என் பெயர் நர்மதா, கணவர் பெயர் சிலம்பரசன். அவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டோம். ஆனால், எங்களுக்கு குழந்தை இல்லை. ஏற்கனவே ஒருமுறை கர்ப்பமாகி, அபார்ஷன் ஆகிவிட்டது. பின்னர் மீண்டும் ஐந்து மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தேன். அதுவும் அபார்ஷன் ஆகிவிட்டது. அந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களின் நான் தெரிவிக்கவில்லை. எனக்கு குழந்தை பேறு இல்லை என்பதை யாரும் கூற கூடாது என்பதற்காக கர்ப்பமாக இருப்பதாக நடித்து வந்தேன். என் கணவரை கூட நம்ப வைத்தேன். இதையடுத்து, எனக்கு 5 ஆவது மாத சீர்வரிசை விழா நடத்தப்பட்டது. பின்னர் பாகூருக்கு வந்துவிட்டோம்.

இந்நிலையில், சிலர் என் வயிறு பெருசாக இல்லையே என்று கேள்விகேட்டனர். எனக்கு சத்து குறைவாக உள்ளதாக கூறி சமாளித்து விட்டேன். கர்ப்பமாக இருப்பதை காட்டிக்கொள்ள அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள போவதாக கோரி கணவரிடம் பணம் வாங்கி வந்தேன். இப்படியே பத்து மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் குழந்தைக்கு என்ன செய்வது என்று நினைத்து குழம்பியிருந்தேன். இந்நிலையில், ஏதாவது அரசு மருத்துவனையில் குழந்தையை திருடிவிட்டு திட்டமிட்டேன்.

திருடப்படும் குழந்தை என் குழந்தைதான் என்று கூறி அனைவரையும் நம்ப வைக்க முடிவு செய்தேன். அதன்படி, கடலூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்த பாக்யலட்சுமியிடமும், அவரது மாமியாரிடம் நைசாக பேசி நெருக்கமானேன். சம்பவம் அன்று தனியாக இருந்த பாக்யலட்சுமியிடம் மாமியார் குழந்தையை வாங்கி வர சொன்னார் என்று பொய் கூறிவிட்டு குழந்தையை அங்கிருந்து வாங்கி வந்துவிட்டேன். ஆனால், போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்” என இவ்வாறு கூறினார். நர்மதா கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து போலீசார் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருடப்படுவது தொடர் கதையாகி வருவதால், ஜாக்கிரதையாக இருக்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், சமூகத்தால் மலடி என்று அழைக்கப்பட்டுவிடுவோமே என்ற பயத்தில் வேறொருவரின் குழந்தையை திருடும் அளவுக்கு துணிச்சலை கொண்ட பெண், அதே துணிச்சலுடன் ஏன் குடும்பத்தாரை சமாளிக்க முடியாது என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
admin February 17, 2021
Share this Article
Facebook Twitter Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article ஸ்ரீலங்கா வரும் பாகிஸ்தான் பிரதமர்! வழங்கப்பட்ட வாய்ப்பு – இறுதி நேரத்தில் ரத்து
Next Article வெள்ளைப்பூசணிக்காய் நிறைய சாப்பிடுங்க… எடை குறையும்… அல்சர் குணமாகும்… இன்னும் நிறைய…
Times.lkTimes.lk
Follow US

© 2023 Times Media Network | All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?