கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை உருவாக்க மற்றும் அபிவிருத்தி செய்ய தமது நாடுகளின் முதலீட்டாளர்களின் விபரங்களை வெளியிடுமாறு இந்தியா மற்றும் ஜப்பானை கேட்கவுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுக அமைச்சரவை பேச்சுக்குழு நேற்றையதினம் கூடி இது தொடர்பாக ஆராய்ந்ததுடன் மேற்படி இருநாடுகளையும் முதலீட்டாளர்களின் பெயர்களை தருமாறு கேட்கவுள்ளதாகவும் துறைமுக அமைச்சின்செயலாளர் யு டி சி ஜெயலால் தெரிவித்தார்.
- Advertisement -
இந்த முடிவு இந்த வாரம் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஜப்பானிய தூதரகத்திற்கு தெரிவிக்கப்படும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் இந்தக் குழு கூடவுள்ளது. கிழக்கு கொள்கலன் முனையத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க இலங்கை முடிவு செய்துள்ளதுடன், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானிடம் கையளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.