பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டால், துறைமுகங்கள் மாத்திரமல்ல ஒரு பௌத்த விகாரையும் எஞ்சி இருக்காது என்று பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சியினாது ஆட்சியமைக்கும் என்று வெளியான தகவல்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -

தொடர்ந்தும் பேசிய அவர், இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, அந்த கட்சி நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட்டால், அது வைரஸாக மாறிவிடலாம். மலையகத்தின் அரசியலை இந்தியாவே கையாள்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கூட இந்தியாவே கையாண்டு வருகின்றது.
- Advertisement -
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாட்டில் அரசியலில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அரசியல் தேவையை நிறைவேற்று நடவடிக்கை அல்லவா?. பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டால், துறைமுகங்கள் மாத்திரமல்ல ஒரு பௌத்த விகாரையும் எஞ்சி இருக்காது என்றார்.