வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
- Advertisement -
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 377 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 416 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -

5 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடையோர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள். கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.