Times.lkTimes.lk
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Reading: வெள்ளைப்பூசணிக்காய் நிறைய சாப்பிடுங்க… எடை குறையும்… அல்சர் குணமாகும்… இன்னும் நிறைய…
Share
Aa
Times.lkTimes.lk
Aa
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Times.lk > Life style > health > வெள்ளைப்பூசணிக்காய் நிறைய சாப்பிடுங்க… எடை குறையும்… அல்சர் குணமாகும்… இன்னும் நிறைய…
health

வெள்ளைப்பூசணிக்காய் நிறைய சாப்பிடுங்க… எடை குறையும்… அல்சர் குணமாகும்… இன்னும் நிறைய…

admin
Last updated: 2021/02/17 at 11:49 AM
admin
Share
3 Min Read
SHARE

சாம்பல் பூசணிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் சாறு மிகவும் நல்லது. இதன் சாற்றை குடிப்பதால் வயிற்று புண் முதல் இரத்தக் கசிவு வரை தடுக்க முடியும். இன்னும் இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்வோம்.

இதுவரை சாம்பல் பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதன் நன்மைகள் பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா. உண்மையில் சாம்பல் பூசணிக்காய் சத்துக்கள் நிறைந்ததோடு மட்டுமல்லாமல் ஏராளமான நன்மைகளையும் நமக்கு வழங்கக் கூடியது. சாம்பல் பூசணிக்காய் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துகள் கொண்ட காயாகும். இதில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பது உங்க சீரணத்தை மேம்படுத்துவதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

தென் கிழக்கு ஆசியாவில் பல விதமான உணவுகளில் இந்த காயானது பயன்படுத்தப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் நிறையா இருப்பது வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இந்த காய்கறியின் பிற பெயர்கள் வெள்ளை பூசணிக்காய் , குளிர்கால முலாம்பழம் என அழைக்கப்படுகிறது. இதில் நிறைய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, ரைபோஃப்ளேவின், தியாமின், நியாசின் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இந்த காயில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் எடை இழப்புக்கு ஏற்றது.

இந்த பூசணிக்காய் பல நோய்களை எதிர்த்து போராட உதவுவதால் சீனர்கள் தங்கள் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் இதை பயன்படுத்துகின்றனர். எனவே இந்த சாம்பல் பூசணிக்காய் மேலும் எந்தெந்த வகைகளில் நமக்கு நன்மை தருகிறது என அறிந்து கொள்வோம்.

சாம்பல் பூசணிக்காய் இயற்கையிலேயே வயிறு மற்றும் குடல் சவ்வுகளில் ஏற்படும் புண்களை எதிர்த்து போராட உதவுகிறது. இது காரமான உணவுகள் சாப்பிடுவதால் அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதன் காரணமாக உண்டாகும் அமிலத்தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சாம்பல் பூசணிக்காய் பாக்டீரியா எதிர்ப்பு முகவராக செயல்படுவதன் மூலம் வயிறு மற்றும் குடலில் உள்ள அனைத்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அகற்ற உதவுகிறது. இது இரைப்பை குடல் தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் கலோரி நிறைந்த உணவுக்கு மாற்றாக இந்த சாம்பல் பூசணிக்காயை எடுத்துக் கொள்ளலாம். இதில் 96%தண்ணீர் மட்டும் தான் உள்ளது. இது உங்க உடல் எடையை சரியாக பராமரிக்க உதவுகிறது. எனவே மக்கள் தங்கள் உடல் எடையை பழைய நிலைக்கு கொண்டு வர உதவுகிறது

சாம்பல் பூசணிக்காய் இயற்கையிலேயே இரத்தம் கசிவதை தடுக்க உதவுகிறது. இதன் மூலம் நாம் இரத்த போக்கை கட்டுப்படுத்த முடியும். இந்த காய்கறி உட்புற இரத்தப்போக்கிலும் பல அதிசயங்களை செய்யக் கூடியது. கோடையில் பொதுவாக ஏற்படும் மூக்கு இரத்தப்போக்குகளை நிறுத்த இது உதவுகிறது. அதனுடன் ஹீமாட்டூரியா (சிறுநீரகத்தில் உட்புற இரத்தப்போக்கு இருப்பதால் சிறுநீரில் இரத்தம் கசிவது ), உடலில் ஏற்படும் புண்கள், மற்றும் பிற உள் இரத்தப்போக்குகளின் மூலம் ஏற்படும் இரத்தப் போக்கு போன்ற பிரச்சினைகளை சாம்பல் பூசணிக்காய் சாற்றை உட்கொள்வதன் மூலம் நிறுத்தலாம்.

சாம்பல் பூசணிக்காய் மனநிலையில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. இயற்கை மயக்க மருந்தாக செயல்படுவதால் மன நோய்களை சமாளிக்க உதவுகிறது.இது நரம்புகள் மற்றும் மூளையில் ஒரு விளைவைக் கொண்டுள்ளது. எனவே, கால்-கை வலிப்பு, பதட்டம், தூக்கமின்மை, நியூரோசிஸ் மற்றும் சித்தப்பிரமை போன்ற நரம்பு மண்டலம் தொடர்பான நிலைமைகளைப் போக்க இது பயன்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் சாம்பல் பூசணிக்காய் சாறு குடிப்பது அனைத்து மன அழுத்தங்களையும் சமாளிக்கவும் அமைதியாக இருக்கவும் உதவுகிறது .

இந்த சாம்பல் பூசணிக்காய் சாற்றை எலுமிச்சை சாறுடன் அல்லது வேறு எந்த ஃபேஸ் பேக்கின் ஒரு பகுதியாக கலந்து சருமத்தில் தடவும்போது, சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகளை நீக்கி சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது. சருமத்திற்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் இந்த காய் பல நன்மைகளை கொடுக்கிறது.

சாம்பல் பூசணிக்காய் சாறு தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்குத் தீர்வளிக்கிறது. நீங்கள் ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன்பு இந்த சாற்றை தலையில் தடவுங்கள். உங்க தலைக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்யில் இந்த பூசணிக்காய் விதைகளை சேர்த்து கூட பயன்படுத்தி வரலாம்.

இந்த நன்மைகளுடன் சாம்பல் பூசணிக்காயை சமையல் மற்றும் பல இனிப்பு வகைகளில் பயன்படுத்துகின்றனர். சாம்பல் பூசணிக்காயை கொண்டு மிட்டாய் தயாரித்தல், சாம்பல் பூசணிக்காய் ஜாம், கெட்ச்அப், கேக்ஸ், ஐஸ் க்ரீம், ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகளில் என பல வழிகளில் சாம்பல் பூசணிக்காயை சமைக்க முடியும்.

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
admin February 17, 2021
Share this Article
Facebook Twitter Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article இரண்டு முறை கருக்கலைப்பு, 19 வயது பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்..!
Next Article முகநூல் காதலை நம்பி வீட்டை விட்டு ஓடிய 20 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி
Times.lkTimes.lk
Follow US

© 2023 Times Media Network | All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?